புற்று நோயாளி என்ற பெயரில் மக்களிடம் நிதி மோசடி

Monday, July 18, 2011

கனடாவில் புற்று நோயாளி என்ற பெயரில் மக்களிடம் நிதி மோசடி செய்துள்ள நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவரால் ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவரது பெயர் டக்ளஸ் கிளார்க்(64). இவர் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என்று மக்களிடம் கேட்டுள்ளுள்ளதாக தெரிகிறது.
இவருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் இவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நபர் ராணுவ சீருடையை அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளார்.
இவ்வாறு மக்களை ஏமாற்றி பெற்ற பணத்தை கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets