வட பகுதி மக்களுக்காக கீரி மலையில் இராணுவத்தினரால் 10 நாட்களில் அமைக்கப்பட்ட 100 வீடுகள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வினால் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.
ஓவ்வொன்றும் 3 இலட்ச ரூபாவூக்கும் அதிக பெறுமதி கொண்ட இந்த வீடுகள் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் பன்முகப்படுத்தப்படுத்த நிதியைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.
கீரிமலை- சாவகச்சேரி.- மானிப்பாய்- ஊர்காவற்றுறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் யாழ் கட்டளைத் தளபதி ஹதுருசிங்கவின் மேற்பார்வையில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டன.

0 comments:
Post a Comment