அப்ரிடி இப்போதும் முதிர்ச்சியடையாமல் உள்ளார்: கவுதம் காம்பீர் தாக்கு

Monday, July 18, 2011

பாகிஸ்தான் முன்னாள் கப்டன் முதிர்ச்சியடையாதவர் என்று இந்திய தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்த வெற்றியை மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக காம்பீர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இதுகுறித்துப் பேசிய அப்ரிடி, இந்தியர்கள் பாகிஸ்தானியர்களை விட பெரிய மனது படைத்தவர்கள் அல்ல. குறுகிய எண்ணம் கொண்டவர்கள் என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் காம்பீர் இதுகுறித்து மேலும் கூறியது, அப்ரிடி 16 வயதில் பாகிஸ்தான் அணிக்கு விளையாட வரும் போது முதிர்ச்சியடையாமல் எப்படி இருந்தாரோ, அதேபோன்று தான் இப்போதும் உள்ளார்.
மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு உலகக் கோப்பையை வெற்றியை அர்ப்பணிப்பதாகக் கூறியது எனது தனிப்பட்ட கருத்து என்றார். 2007 ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியின் போது காம்பீருக்கும், அப்ரிடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காம்பீருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அதுகுறித்துப் பேசிய காம்பீர், அந்த சம்பவத்தின் மூலம் சிறிய பிரச்சினைகளுக்கு எல்லாம் கட்டுப்பாட்டை இழக்கக்கூடாது என தெரிந்து கொண்டேன். அப்ரிடியுடனான அந்த மோதல் சம்பவம் எனது தனிப்பட்ட பிரச்சினை. அவர் என்னை திட்டினார். அதுகுறித்து இங்கு பேச விரும்பவில்லை என்றார்.
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் மீது சாடிய காம்பீர், அவர் களத்தில் கீப்பிங் செய்யும் போது தேவையில்லாமல் உரக்கக் குரல் எழுப்புவார். அவர் மட்டுமல்ல பாகிஸ்தானைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் இந்தப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். எல்லா விக்கெட் கீப்பர்களும் கம்ரான் போன்றவர்கள் அல்ல.
இந்திய கப்டன் டோனி களத்தில் இருக்கும் போது ஒருபோதும் தேவையில்லாமல் சத்தம் போடமாட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக ரன் குவித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக விளையாடுவதைத்தான் விரும்புகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி, ஆஷஸ் தொடர் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
ஐ.பி.எல். போட்டியின் போது காயமடைந்த போது, அதை முன்னால் கப்டன் பிஷன் சிங் பேடி விமர்ச்சித்தது தேவையில்லாததது என்று குறிப்பிட்ட காம்பீர், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் இந்த விடயத்தில் தவறாக புரிந்துகொண்டுள்ளார். நான் ஐ.பி.எல். போட்டியின் போது காயமடையவில்லை. லேசான சிராய்ப்பு தான் ஏற்பட்டது. எல்லா வீரர்களுக்குமே சிராய்ப்பு ஏற்படுவது வழக்கமானது தான் என்றார்.

0 comments:

IP
Blogger Widgets