படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் படத்தயாரிப்பு குழுவினருடன் இயக்குனர் முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சூர்யாவின் சாகச நடிப்பை பயன்படுத்த போகிறாராம் அவர். படப்பிடிப்பு முடிந்து, ஆர்ப்பாட்டமாக விருந்தும் நடந்துள்ளது. இதில் படத்தில் பணியாற்றியவர்கள் கலந்து கொண்டார்கள்.
விருந்தில் கலந்து கொண்ட படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், ”ஏழாம் அறிவு” படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். நாம் மறந்து போன தமிழ் வரலாற்றை உலகத்திற்கு எடுத்துக்காட்டும். படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதற்க்கான விருந்தில் அனைவரும் ஒன்று கூடியது மகிழ்ச்சியான தருணம் என்றும் தெரிவித்துள்ளார். |
0 comments:
Post a Comment