இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
பிரிட்டன் மக்களின் அபிமானத்தை பெற்ற இந்த இளவரசியின் திடீர் மரணம் பிரிட்டன் மக்களை மட்டுமல்லாமல் உலகையே உலுக்கியது.
எப்போதும் ஒரு புன்னகையுடன் திகழும் இளவரசி டயானா மறைவைத் தொடர்ந்து அவரது பெயரில் நினைவு நிதி திரட்டப்பட்டது.
இந்த நினைவு நிதிக்கு பிரிட்டனின் ஓய்வூதியர்கள், சிறு குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பணம் அளித்தனர். இந்த நினைவு நிதி 100 மில்லியன் பவுண்ட் அளவை எட்டியது. இந்த தொகை 350 நல்ல நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
சமூகத்தில் வறுமையில் வாடும் நலிவுற்றோருக்கு உதவும் வகையில் இந்த நினைவு நிதி பயன்படுத்தப்பட்டது.
இளவரசி டயானா நினைவு நிதியில் 13 மில்லியன் பவுண்ட் மீதம் உள்ளது. இந்த நிதியும் 2012ம் ஆண்டுடன் முடிவடையும்.
நிதி பணம் அனைத்தும் இறக்கும் தறுவாயில் உள்ளவர்கள், நலம் பேணுதல், புகலிடம் தேடுவோர், சிறை சீரமைப்பு, மனநலம் பாதித்தோருக்கு உதவுதல் மற்றும் கண்ணி வெடி தாக்குதலில் பாதிப்பு அடைந்தவர்கள் ஆகியோருக்கு டயானா நினைவு நிதி 2007ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டது.
டயானா நினைவு நிதி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
இளவரசி டயானாவின் நினைவாக நிதி திட்டம்: அடுத்த ஆண்டு முடிவடையும்
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment