ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி கிடையாது!

Monday, July 25, 2011

தி.மு.க. பொதுக்குழு முடிவு
கலைஞர் கருணாநிதியே  தி.மு.க.வின் தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பார் என முடிவூ செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூரில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று கூடியது. இதில் கருணாநிதி தலைமை தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக  தலைமைப் பதவி குறித்த சர்ச்சைக் கருத்துக்கள் தீவிரமாகப் பேசப்பட்ட நிலையில்  முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட  3000 பேர் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற  தி.மு.க . பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்ட போதும்  "திராவிட இயக்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பு கருணாநிதியிடம் தொடரும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம்  கட்சியில் வாரிசுப்போட்டிக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டது. கட்சித் தலைமைப் பதவி ஸ்டாலினுக்கா அல்லது அழகிரிக்கா என்ற பரபரப்பு முடிவூக்கு வந்துள்ளது.

0 comments:

IP
Blogger Widgets