மார்க்கெட் இல்லாத நடிகர்களை யாரும் மதிக்க மாட்டார்கள்: விவேக்

Tuesday, July 19, 2011


24 பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" கரண், அஞ்சலி நடிக்கிறார்கள், வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.
இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது.
விழாவில் நடிகர் விவேக் பேசியது:
வெற்றி பெற்றால்தான் சினிமா உலகம் கை கொடுக்கும். மார்க்கெட் இல்லாத நடிகர்களை யாரும் மதிக்க மாட்டார்கள்.
எப்படி இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என விசாரிக்க கூட மாட்டார்கள்.
நடிகர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் என நினைக்கிறார்கள்.
அவ்வளவு சம்பளம் வாங்கும் நிலையை அடைய அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை.
அவர்கள் வடித்த ரத்தகண்ணீர் யாருக்கும் தெரிவதில்லை, இவ்வாறு விவேக் பேசினார்.
விழாவில் இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், சுசீந்திரன், ராஜேஷ், சீனு ராமசாமி, பிரபுசாலமன், பேரரசு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தனஞ்செயன், சிவா, சிபு ஐசக், நடிகர்கள், சரவணன், நகுலன், நடிகை அஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

IP
Blogger Widgets