Election_Dept தபால் மூல வாக்காளர் அட்டைகள் அனுப்பிவைப்பு தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று (1) விசேட கூட்டமொன்று நடைபெறுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் பாதுகாப்பு ஒழுங்குகள் கட்சிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் இங்கு ஆராயப்பட உள்ளன. 64 உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஜுலை 23 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. தபால் மூல வாக்களிப்பு ஜுலை 12 ஆம் திகதி நடைபெற உள்ளதோடு இதற்கான வாக்காளர் அட்டைகள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. 2ம் கட்ட உள்ளூராட்சித் தேர்தலில் 2603985 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Monday, July 18, 2011

சுகாதார அமைச்சர் உத்தரவு
1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுச் சட்டத்தின் 32வது ஷரத்தினை கடுமையாகக் கடைபிடிக்குமாறு சுகாதார  அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் உணவுப் பொருட்களைத் தயாரித்தல்  களஞ்சியப்படுத்தல்  பயன்படுத்தல்  விநியோகித்தல்  இறக்குமதி செய்தல்  உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனைக்காக பிரசாரம் செய்தல் ஆகிய செயற்பாடுகள் யாவும் இன்று முதலாம் திகதி முதல் தடைசெய்யப்படுகின்றது.
இது தொடர்பான விஷேட அறிவிப்பை சுகாதார அமைச்சு நேற்று விடுத்தது.
இச்சட்ட ஏற்பாட்டை மீறுபவர்களு க்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உணவுப் பரிசோதகர்களுக்கும்  பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கும்  கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets